படம்: மின்சாரக் கனவு
இசை: A.R.ரஹ்மான்
குரல்: அனுராதா ஸ்ரீராம்
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே
புகழ்மைந்தன் தோன்றினானே
கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே
(அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே...)
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே...!
Labels: பிடித்த பாடல்
Subscribe to:
Post Comments (Atom)

4 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
annaa...super yeeeeee
அண்ணா நீங்க நிஜமாவே நல்லவங்கண்ணா
My all time favourite song. =))
பஸ்ஸு பஸ்ஸு :)
Post a Comment