கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை
தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வமன்றி யாரும் இல்லை
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா எம் தலைவா
ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா எம் இறைவா
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே
இது தான் இயற்கை தந்த பாசபந்தமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை
ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்
ஆளுக்கொரு ஜாதியில்லையே அது போல் உயிர் பிறப்பில்
உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே ...!
Subscribe to:
Post Comments (Atom)

18 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
;;))
பாடல் பகிர்வுக்கு நன்றி !
சூப்பர் பாட்டு பாஸ்
மனதிற்கு நெகிழ்ச்சி தரக்கூடிய பாடல்.
அருமையான பாடல்....நல்ல நேரம் ;)
குட்
உள்ளத்தை உருக்கும் அருமையான பாடல்.
::))
நல்ல பாடல்.எனக்கு பிடித்த பாடல்.
பகிர்வுக்கு நன்றி.
மனதை இளக வைக்கும் மிக அருமையானப் பாடல்.
காலத்திற்கேற்ற பாடல்.
எனக்கு பிடித்த பாடல்.
அருமையான பாடல் நிஜமா நல்லவரே!!
அருமையான பாடல்.
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் கண்ணில் நீர் வரவழைக்கும் பாடல்.
இன்று பிறந்தநாள் காணும் இசைஞானி நீடூடி வாழ்க.
இந்த பாடலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. முதன் முதல் கேட்டிருக்கிறேன். ஒரு பத்து தடவைகள் தொடர்ந்து கேட்டேன். மிக்க நன்றி. அப்புறம், எப்படி இந்த வீடியோவை இங்கே போடுவது என்று சொல்லித்தருவீர்களா. நன்றி.
ஆளுக்கொரு ஜாதியில்லையே...
ரைட்டு :)
/அனாமிகா துவாரகன் said...
அப்புறம், எப்படி இந்த வீடியோவை இங்கே போடுவது என்று சொல்லித்தருவீர்களா. நன்றி./
Youtube தளத்தில் பாடலுக்கு பக்கத்தில் embed code இருக்கும்...அதை அப்படியே copy பண்ணிட்டு வந்து இங்க paste பண்ணிடுங்க...அவ்ளோ தான்!
Thank you =))
Post a Comment