கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு...!

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க. கேக்குறதுக்கு என்னவோ சந்தோஷமா தான் இருக்கு.....ஆனா நிஜத்தில் முழி பிதுங்குது. வேற ஒண்ணும் செய்றதுக்கு இல்ல கேக்கிறதை தவிர.

வெண்பா வாத்தியாரின் புதிர் மோகம்!

நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சியை உங்களில் பலருக்கும் தெரிஞ்சி இருக்கும். மரத்தடியில் ஆரம்பித்த அவருடைய பயணம் ஏகப்பட்ட பரிமாணங்களை கொண்டதுன்னும் தெரிஞ்சி இருக்கும். வெண்பா மேல ரொம்ப அலாதியான மோகம் கொண்டவரு. அவரு கொண்ட மோகம் எப்படிப்பட்டதுன்னா ஆபீஸ் போயிட்டு இருக்கும் போது சிக்னல்ல கிடைக்கிற நிமிஷ கேப்ல கூட வெண்பா யோசிச்சி சிக்னல் விழுந்தது கூட தெரியாம பின்னால் உள்ளவங்க கிட்ட திட்டு வாங்கிட்டு போற அளவுக்கு பிரபலம்.

அப்புறம் என்ன ஆச்சுதோ தெரியல வெண்பாவை ஒரு ஓரமா கடாசிட்டு கேமரா மேல தீராத காதல் கொள்ள ஆரம்பிச்சாரு. புரபொஷனல் கேமரா வாங்கி மரம் செடி கொடியில் ஆரம்பித்து ஓடுறது ஆடுறது பறக்கிறதுன்னு ஒண்ணு விடாம படமா எடுத்து தள்ளினார். மேக்ரோ லென்ஸ் வாங்கினதை வெளி உலகுக்கு காமிக்க ஒரு எறும்பை கொன்னு அதை பெரிய டினோசர் கணக்கா படம் பிடிச்சார்ன்னா பார்த்துக்கோங்க.

புகைப்படக்கலைல ஜீவ்ஸ் அடுத்த கட்டத்துக்கு போவதை ஆர்வமா எதிர்பார்த்திட்டு இருக்கும் போது புரபொஷனல் கேமராவை தூக்கி பரண் மேல போட்டுட்டு பாக்கெட்ல இருக்கிறது கூட தெரியாத அளவுக்கு ஒரு பாய்ண்ட் அண்ட் ஷூட் கேமரா வாங்கனும்னு சொன்னாரு. என்ன ஆச்சு இந்த மனுஷனுக்குனு யோசிச்சிட்டு இருக்கும் போது தான் அவரோட பதிவு கண்ணுல பட்டுச்சு.

புதிர் போட ஆரம்பிச்சி இருக்காரு. இது எவ்ளோ நாளைக்குன்னு தெரியலை. ஆனா கொஞ்சமா நம்ம மூளைக்கு வேலை கொடுக்கிற அவரோட புதிர்கள் ரொம்ப நல்லாவே இருக்கு. நீங்களும் நேரம் கிடைக்கும் போது அவரோட புதிருக்கு சென்று பாருங்க.


புதிருக்கான சுட்டி:

உங்களுக்கான சவால்.. முடியுமா உங்களால்?

பனை ஓலைப்பாய்!

ஓலைப்பாய் பார்த்திருக்கின்றீர்களா? கிராமங்களில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் பனை ஓலையில் பின்னப்பட்ட பாய் வைத்திருப்பார்கள். நெல் மற்றும் ஏனைய தானியங்களை வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்கு பனை ஓலைப்பாயை பயன்படுத்துவார்கள்.

பனைமர குருத்து மட்டையாக விரியும் முன் வெட்டி நிழலில் உலர்த்தி தனித்தனி ஓலையாக பிரித்து எடுத்து சின்ன ஓலைகளை கழித்துகட்டிவிட்டு ஒரே அளவிலான பெரிய ஓலைகளை சேர்த்து வைத்துக்கொண்டு ஓய்வான நேரத்தில் பாய் பின்னுவார்கள்.

தேவைக்கு ஏற்ப சிறிய மற்றும் பெரிய அளவிலான பாய் பின்னுவார்கள். பயன்பாட்டுக்கு பின் ஒரு பக்கத்தில் இருந்து சுருட்டி கட்டி வைத்து விடுவார்கள். மறுமுறை தேவைப்படும் போது அதை விரிப்பது கொஞ்சம் சிரமமான காரியம். ஒரு பக்கத்தில் இருந்து விரித்துக்கொண்டே வந்தால் மறுபக்கத்தில் இருந்து சுருண்டு கொண்டே வரும்.

சரி எதுக்கு இவ்ளோ கதை எல்லாம்னு நீங்க கேக்க நினைக்கிறது புரியுது. சரி விஷயத்துக்கு வருகிறேன். வைகைப்புயல் ஓலைப்பாயை விரிக்கிறேன் பேர்வழின்னு என்ன நிலைக்கு ஆளாகிட்டார்னு நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க!

நாங்க எல்லாம் ஊருக்குள்ள பலபேருக்கு யோசனை சொல்லுறவய்ங்கன்னு கிளம்பி வைகைப்புயல் ரேஞ்சுக்கு யாரும் ஆளாகிடாதீங்க. அவ்ளோ தான் சொல்வேன்!