எண்ணங்கள் விரிக்கும் வலை...!

விழித்தெழும் நினைவுகள்
ஒரு போதும் அறிவதில்லை
விழியோர நீர்ப் படலங்களை!

**********

பள்ளியறைச் சுவர்கள்
பசியோடு தவிக்கின்றன
நாமில்லாத நாட்களில்!

**********

பூ மலர்ந்து சிரிக்கிறது
அடுத்தடுத்து சிறைப்படும்
தொடுத்தலில்!

**********

நேற்றின் நிழல்கள்
விடுதலை அடைகின்றன
நாளையக் கனவுகளில்!

**********



நான்கு மூன்றிலும்
நடுவரி சுட்டது
கசியும் மௌனத்தில்!

வரையாத கோடு...!

வாழ்வில் கலைந்து போகும்
நினைவுகளில் கரைந்தும் கூட
தெரிந்தே கட்டுகிறோம்
மனக்கோட்டைகளை!

நிதமும் பழகிய பொழுதுகள்
இறுதியில் நினைவுகளாய்
மீளாத் துயரில்
மீண்டெழாத நினைவுகளாய்!

கிட்டிய இதழோரச் சிரிப்பு
மீண்ட சொர்க்கமாய்
நிழலாடுகிறது
விழித் திரைகளில்!

முடிவற்று வரைந்த கோட்டில்
இலக்கற்று பயணிக்கிறேன்
எட்டிப் பார்க்காமலே நகைக்கின்றன
நான் வரையாத கோடுகள்!


ஏன் இப்பூடின்னு இங்க போய் பாருங்க

வளர்ப்புப் பிராணிகள் (A lovely parrot - September PIT contest)

ஒவ்வொரு மாதமும் படம் அனுப்ப வேண்டும் என்று நினைத்தாலும் இறுதி நேரத்தில் அனுப்ப இயலாமல் போய்விடுகிறது(படம் எடுத்தால் தானே அனுப்ப முடியும்- இது என்னோட மனதின் குரல்..உங்களுக்கு எல்லாம் கேட்காது).

சரி இந்த மாதம் எப்படியும் கலந்து கொள்ளவேண்டும் என்று ஒரு முடிவோடு களத்தில் இறங்கியாச்சு. இந்த கிளி படம் தான் அனுப்ப போறேன். எப்படி இருக்கு???


சாப்பாட்டுப் பயணங்களில்...!



















பசியின் ஆற்றாமையில்
கவளம் கவளமாய் தொடங்கிய
சாப்பாட்டுப் பயணம்
இடவலமாய் கை சுழற்றி வீசுகிறது
இடையிடையே கிழிந்த இலையில்!
இறுதிவரை நிகழவேயில்லை
பசி மாற்றம்!



பசியின் துவக்கத்தில்
பருக்கைகளின் மேல்
துளிர்க்கும் வேட்கையும் விருப்பும்
ஆசையும் ஆர்வமும்
உள்ளிறங்கும் போது
முற்றிலும் நீர்த்துப்போகிறது
ருசியின் சுவைகளின்றி!


எல்லாப் பந்தியின் நிறைவிலும்
உள்நுழைவதில் பரபரப்பு வியாதியாய்!
ஒரு முறையாவது பந்தியில்
முதலில் உட்கார வேண்டும்
சங்கல்பம் தோன்றி மறைகிறது
வழக்கம் போல முட்டி மோதி
இறுதியாய் இடம் பிடிக்கையில்!






படிச்சிட்டு திட்ட இல்லைன்னா பாராட்ட நினைக்கிறவங்க....அப்படியே இங்க வாங்க!

நல்ல நாளா பார்த்து...!

மூன்று வார விடுமுறை இமைப்பொழுதில் முடிந்தது போல இருக்கிறது. இந்தியா சென்று மீண்டும் தேவையற்ற இரும்பினை அடிக்கும் வேலைக்கு திரும்பியாயிற்று. நினைவுகள் முழுவதும் குட்டி தேவதையை சுற்றியே இருக்கிறது. பதிவிலும் தொலைபேசியிலும் வாழ்த்திய அனைவருக்கும் செல்லக்குட்டி மகிழினி சார்பில் நன்றி.

நிறைய(இது சும்மா பில்டப்புக்கு...எனக்கு தெரிஞ்சவங்களே ஒரு சிலர் தான்) நண்பர்களிடம் இந்தியா வரும்போது சந்திக்கிறேன் என்று சொல்லி இருந்தேன். மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்ததிலேயே நாட்கள் ஓடி விட்டன. யாரும் திட்டாதீங்க. அடுத்த முறை சந்திக்க முயற்சிக்கிறேன்.



































கொஞ்சநாளா கதவடைப்பு பண்ணியிருந்த வலைப்பூவை மீண்டும் திறந்தாச்சு....அப்புறம் என்ன மீண்டும் ஒரு நல்ல நாளா பார்த்து மூடிட்டு வேற வேலைய பார்க்க போக வேண்டியது தான்:)

InDefinite Close...!

















இனிய பிறந்தநாள்(12.07.2010) வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ செல்லம்!






ஜெய ஸ்ரீ செல்லம் இன்று(12.07.2010) தன்னோட பிறந்த நாளை கொண்டாடுறாங்க. அவங்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

ஜெய ஸ்ரீ யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஃப்ரொபஷனல் கொரியர்....இல்ல இல்ல ஃப்ரொபஷனல் போட்டோகிராபர் நம்ம ஜீவ்ஸ்
அண்ணாச்சியின் செல்லப்பொண்ணு தாங்க ஜெய ஸ்ரீ. வாங்க...வாழ்த்து சொல்லிட்டு போங்க.


ஜெயஸ்ரீ செல்லம்...அப்பாவுக்கு தினமும் நிறைய பல்பு கொடுத்து அவரை ஒரு வழி பண்ணனும் சரியா...அப்போ தான் அங்கிள் உனக்கு நிறைய சாக்லேட் வாங்கி கொடுப்பேன்...உனக்கு இன்னும் கிப்ட் கூட வாங்காம இருக்கார் பாரு...அவரை உண்டு இல்லைன்னு பண்ணுடா செல்லம்:)